மைத்திரி மங்களவிற்கு இடையே ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரச ஊடகங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை விட அங்கு அரச பிரதிநிதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி பிரதிநிதிகளின் பெயர்கள் அமைச்சர் சமரவீரவிற்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அரச ஊடகங்களையும் சில மிக முக்கியமான திணைக்களங்களையும் தனது தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்பட்டன.

அத்தோடு ஜனாதிபதியின் கட்சி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்காதிருப்பதனால் தனக்கு எதிரான பிரச்சாரங்களை அரசாங்க தரப்பு முன்னெடுக்கும் என்று கருதியே ஜனாதிபதி இவ்வாறு நடவடிக்கை எடுக்க காரணமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.