பழம்பெரும் நடிகை மெரினா பீச்சில் கர்சீப் விற்கும் அவலம்!

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் கே.ஆர்.ரங்கம்மாள். இவர் பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் நடத்துள்ளார். தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் இவருக்கு 75 வயது ஆகிறது.

இவர் சென்னை, வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி காமெடியில் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவரை ‘சூ பாட்டி’ என்றும் அழைக்கின்றனர்.

இவ்வாறாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வடிவருகிறார். இவர் 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை ஓட்டுகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் விடுகிறார்