பட்டப்பகலில், நடுரோட்டில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜோதிடர்!

திருப்பூர் குமரன் ரோட்டின் அருகில் பின்னி காம்பவுண்ட் ரோட்டில், ரமேஷ் என்கிற மரத்தடி ஜோசியர் நடந்து சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோசியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் ஈடுபட்ட அவர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கொலைகாரன் நிதானமாக வந்து கொலை செய்துவிட்டு , துண்டு நோட்டீஸ் ஒன்றை மக்களிடம் கொடுத்து சென்றது கண்டறியப்பட்டது.

மேலும் அந்த நோட்டீசை ஆய்வு செய்தபோது, ஜோதிடர் ரமேஷ் பெண்களை வசியம் செய்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும்,பாலியல் ரீதியாக அவர்களைத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.