இலங்கையில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பாடசாலை மாணவிகள் உட்பட பெண்கள் அனைவருக்கும் பொலிஸார் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் இவ்வாறு தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களையும், மாணவிகளையும் ரகசியகமாக வீடியோ எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாபார நோக்கிலேயே இந்த மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இது தொடர்பில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சம்பவமொன்று அண்மையில் மீடியாகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், பேருந்தில் சென்ற பெண்களையும், பாடசாலை மாணவிகளையும் பேருந்து நடத்துடனர் கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தங்காலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் 3 கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதுடன், அவரிடம் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.