அன்று உன்னை ரெமோ ஒதுக்கியது.! இன்று கனவு கன்னிகள் வரவேற்கிறது.!!

தமிழ் திரையுலகில் மக்களால் விரும்பப்படும் திரைப்படங்களாக தற்போது “அடல்ட் ஹாரர் காமெடி” படங்களுக்கு என்று வரவேற்புகள் கிடைக்க துவங்கியுள்ளது. இந்த படங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல இயக்குனர்கள் அவ்வப்போது இது போன்ற நகைச்சுவை கலந்த திரைப்படங்களையும் இயக்க துவங்கியுள்ளனர்.

அந்த வகையில்., திரையுலக பிரபலங்களான யோகி பாபு., யாசிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் அறிமுக இயக்குனரான விநாயக் சிவா இயக்கத்தில்., பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

திரைப்படத்தின் இயக்குனரான விநாயக் சிவா அவர்கள் படம் பற்றி பேசியதாவது., இந்த படத்தை பற்றி கூறவேண்டும் என்றால் “அடல்ட் காமெடி ஹாரர்” என்று கூறுவதை விட “குறும்பு” படம் என்றே கூறலாம். இந்த படத்துக்கான கதையை எழுதும் போது யாருடைய மனதையும் புண்படுத்த கூடாது என்ற கருத்தை நினைவில் வைத்துக்கொண்டு கதையை எழுதினேன்.

இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் மற்றும் காமெடி என்று பொழுதுபோக்கு அம்சத்துடன் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தை விசுவல் எபெக்ட் மற்றும் கம்யூனிகேஷன் மூலமாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுப்ட வல்லுநர்கள் தேர்வு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

தற்போது வரை யோகி பாபு., யாசிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இந்த படத்திற்கான 3 d பணிகளுக்கு 2.0 படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில்., படத்திக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.