வாய்த்தகராறு., வாய்களில் உருண்டு சண்டையிட்ட கோஷ்டி மோதல்.!!

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வாலாஜா அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார்கோவில் தெருவை சார்ந்தவர் மணிகண்டன் (21). அதே பகுதியை சார்ந்தவர் ஷாம்குமார் (21).

இவர்கள் இருவரும் நேற்று இரவு நேரத்தில் அங்குள்ள அரசு மதுபானக்கடையில் மது அருந்தி கொண்டு இருந்தனர். மது அருந்தி முடித்தவுடன் வீட்டிற்கு செல்வதற்கு தயாராகி வெளியே வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அங்கு ஜெயராம்பேட்டை பவானி அம்மன் கோவில் பகுதியை சார்ந்த ஹரி என்பவர்., மதுபான கடைக்கு வெளியே இருந்த மணிகண்டனின் மீது இரு சக்கர வாகனத்தில் மோதுவது போல வந்துள்ளார்.

இதனை கண்ட மணி மதுபோதையில் ஹரியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்ட ஹரியின் நண்பர்கள் உடனடியாக மணிகண்டனை தாக்க துவங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்குள்ள பொதுமக்கள் சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.