தமிழீழ விடுதலைப்புலி கள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்துடனும் பொருத்தமற்ற தலைப்புடனும் வாரப் பத்திரிகையில் வெளியான செய்தியால் அந்தப் பத்திரிகையின் பிரதிககளை யாழ் இளைஞர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
வாரப் பத்திரிகையின் முகப் புப் பக்கத்தில் விடுதலைப்புலி கள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தைப் பிரசுரித்து ‘இரவு இரண்டு மணிக்கும் பெண் கேட்ட தேசிய தலைவர்’ என்று தலைப்பிடப்பட்ட நிலையில் பத்திரிகை வெளியாகி உள்ளது.
செய்தித் தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். சங்கர் ஒரு தொடர் கொலைகளை செய்த கொலையாளியின் வாக்குமூலம் என செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு மற்றும் படம் என்பன வேண்டும் என்றே போடப்பட்டன என்று தெரிவித்தே, பருத்தித்துறைப் பகுதி களில் பத்திரிகையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை அந்தப் பகுதி மக்கள் வெளிக்காட்டியுள்ளனர்.தமிழ் மக்கள் மத்தியில் தேசியத் தலைவர் என்றால் வே.பிரபாகரனே ஞாபகத்துக்கு வரும் நிலையில், வேண்டும் என்றே தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் நோக்குடன் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள் ளது என்று அந்தப் பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.