இந்த உணவுகளை மட்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!

மீதமான சிலவகை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து இங்கு காண்போம்.

எஞ்சிய உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், சிலவகை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படும். அவ்வாறு ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து பார்ப்போம்.

முட்டை

சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கும் முட்டை பொதுவாக மிதமான வெப்பத்திலேயே சமைக்கப்படுகிறது. இதனால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுவதில்லை.

சமைத்த முட்டையை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பன்மடங்கு பெருகிவிடும். இந்த நிலையில் உள்ள முட்டையை சாப்பிடுவது பல வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடுகள் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ஆனால் இந்த பீட்ரூட் வெப்பத்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏனெனில் நைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை சமைத்து, பின்னர் சரியாக குளிர வைக்க வேண்டும். அவ்வாறு குளிர்விக்கப்படவில்லை என்றால், சூடுபடுத்தும் போது நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாறிவிடும். அதன் பின்னர் நைட்ரோசமைனாக மாறிவிடும்.

இவை கார்சினோஜெனிக் பொருட்கள் என்பதால், இந்த உணவு பொருளை சாப்பிடுவது சிலவகை புற்றுநோய்களை உண்டாக்கும்.

உருளைக்கிழங்கு

அதிகளவு வெப்பத்தில் சமைக்கப்படும் உருளைக்கிழங்கு, அறைவெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கப்படும்போது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும்போது க்ளோஸ்டிரீடியம் போட்லினின் வளர்ச்சியை, பௌலலிஸத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வளர்க்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது உடலில் உள்ள க்ளெசமிக் அமைப்பின் மீது பாதிப்பை உண்டாக்கும்.

கீரை

பீட்ரூட்டை போலவே கீரையும் நைட்ரேட்டுகளை அதிகளவு கொண்ட பொருளாகும். எனவே கார்சினோஜெனிக்கை கீரையில் உள்ள நைட்ரேட்டுகள் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால், முடிந்தளவு கீரையை பச்சையாக சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.

ஏனெனில், நைட்ரேட்டுகள் உள்ளதால் கீரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் கூட சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.

அரிசி

அறை வெப்பநிலையில் அரிசி சாப்பாட்டை வைக்கும்போது, அதில் உள்ள பேசிலஸ் செரெஸ் என்னும் பாக்டீரியா அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக 140 F-க்கு மேல் உள்ள உணவையும், 40 F-க்கு கீழ் இருக்கும் உணவையும் இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கோழி இறைச்சி

முட்டையைப் போல் கோழி இறைச்சியிலும் சால்மோனெல்லா, மீதமான பின் சாப்பிடும்போது உடலில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இந்த இறைச்சியில் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் தான்.

எனவே கோழி இறைச்சியை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தும்போது, அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் மாரடைப்பை கூட உண்டாக்கும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள் எப்போதும் ஆரோக்கியமானவை அல்ல. உணவுகள் மீண்டும் வறுக்கப்படும்போது, அதனால் ஏற்படும் புகை உணவின் மீது நச்சுத்தன்மையை உண்டாக்கும். இதனால் ஏற்படும் சேர்மங்கள் வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

கடல் உணவுகள்

மீன் அப்போதே சமைக்கப்படுவது மிகவும் ஆரோக்கியமானதாகும். ஆனால் சமைக்கப்பட்ட மீனை மீண்டும் சமைத்து சாப்பிடுவது மிக மோசமானதாகும். ஏனெனில், 40 முதல் 140 டிகிரிக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் கடல் உணவுகளில், பாக்டீரியாக்கள் அதிகளவில் பரவும்.

மேலும் எந்த வெப்பநிலையில் இருந்தாலும் மீண்டும் கடல் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது ஒரு போதும் ஆரோக்கியமானதாக இருக்காது. இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.

தாய்ப்பால்

தாய்ப்பாலை ஒருபோதும் சூடுபடுத்தக்கூடாது. ஏனெனில் இதனை சூடுபடுத்தும்போது இதில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிர்களும், பாக்டீரியாக்களும் அழிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.