ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளகாதலி.! கொடூர கொலை செய்து உடலை மலைப்பகுதியில் வீசிய கொடூரம்.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பெரும்புகை பகுதியை சார்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவியின் பெயர் குட்டியம்மாள் (43)., இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். அதே பகுதியை சார்ந்தவர் கட்டிட தொழிலாளி தேவேந்திரன் (வயது 25)., இவரது மனைவியின் பெயர் கலைச்செல்வி. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குட்டியம்மாளின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வரும் பழக்கத்தை வைத்திருந்த தேவேந்திரனிற்கு., குட்டியம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ள தொடர்பாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விபரமானது தேவேந்திரனின் மனைவி கலைச்செல்விக்கு தெரியவரவே., பழக்கத்தை கைவிடும் படி கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த அவர் தொடர்ந்து அவ்வப்போது குட்டியம்மாளுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில்., தேவேந்திரனிற்கும் – கலைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டு., அவர் தனது தாயாரின் இல்லத்திற்கு தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து சம்பவத்தன்று., குட்டியம்மாளின் இல்லத்திற்கு சென்ற தேவேந்திரன் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த குட்டியம்மாளை அடித்தே கொலை செய்துவிட்டு., அங்கிருக்கும் மலையடிவாரத்தில் சென்று போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தனது தாயாரை காணாமல் தெரிந்த இடமெல்லாம் தேடியலைந்து பரிதவித்த கார்த்திக்., எங்காவது சென்றிருப்பார் வந்துவிடுவார் என்ற எண்ணத்தில்., ஆடுகளை மேய்க்க மலை பகுதிக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில்., மலைபகுதியில் ஆடுகளை மேய்த்து விட்டு அடிவாரத்திற்கு வரும் போது துர்நாற்றம் வீசுவதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக்., சென்று பார்த்த போது அவரது தாயார் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். அவரது உடலை கண்டு கதறியழுத அவர் சப்பவும் குறித்து காவல் துறையினருக்கு தெரிவித்தார்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குட்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்., கள்ளக்காதலன் தேவேந்திரனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.