நமது முன்னோர்கள் சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி முதலியவற்றை தான் இனிப்பிற்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்த பனங்கற்கண்டில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
மேலும் இதில் மொத்தம் இருபத்தி நான்கு வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கிடைத்த ஒரு அமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும்.
இது உடலுக்கு ஏராளமான நன்மைகள் அள்ளி தருகின்றது. தற்போது பணகங்கற்கண்டை நெல்லிக்காய் சாற்றுடன் கலந்து குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.
- பனங்கற்கண்டானது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை நீக்குவதுடன் இதை உண்பவர்களை திடகாத்திரத்துடன் இருக்கச்செய்யும்.
- வாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள், கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகினால் விரைவிலேயே வயிற்றுப்புண் குணமாகும்.
- மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.
- நெல்லிகாய் சாறுடன் இந்த பனங்கற்கண்டை கலந்து மருத்துவரின் ஆலோசனையுடன் சர்க்கரை நோயாளிகள் இதனை பருகி வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
- பாலுடன் கலந்து உண்ண வேண்டிய மருந்துகளில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த பனங்கற்கண்டை சேர்த்து பயன்படுத்தலாம்.. இதனால் மருந்து முழு வீரியத்துடன் செயல்படும்.
- பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
- பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
- கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.
- பணங்கற்கண்டு இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
- பனங்கற்கண்டுகளில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
- பனங்கற்கண்டுகளில் இருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
- பனங்கற்கண்டு பால் வெள்ளை சர்க்கரை கலந்த பாலை விட சிறந்தது. இந்த பனங்கற்கண்டு பாலுடன் சிறதளவு ஏலக்காய் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
- நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும். வயிற்றுபுண், வாய்ப்புண் போன்றவை நீங்குவதோடு, தூக்கமும் நன்றாக வரும்.
- குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.