காதல் மனைவிக்காக மகிந்தவின் புதல்வர் செய்த செயல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்ச தனது காதல் மனைவிக்காக புதிய காணொளி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மஹிந்தவின் புதல்வர் தனது காதல் மனைவியை கரம்பிடித்திருந்த நிலையிலேயே இந்த காணொளி பாடலை வெளியிட்டுள்ளார்.

“அவளது புன்னகை” என பெயரிடப்பட்டுள்ள இந்த காணொளியில் மனைவியை கிராமத்து இளவரசி என அழைத்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டு இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை தனது காதல் மனைவிக்காக ரோஹித ராஜபக்ஷவே பாடியுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.