சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த உல்லாச விடுதி ஊழியர் ஒருவரை வெல்லவாயா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண், தனது கணவனுடன் உல்லாசப் பயணியாக இலங்கை வந்து, வெல்லவாயா பகுதிக்கு சென்று, அங்கு உல்லாச விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
இதன் போது அந்தப் பெண், தமது உடம்பை “மசாஜ்” செய்து கொள்வதற்கு, ஏற்பாடுகளைச் செய்து தரும்படி, உல்லாச விடுதி முகாமையாளரிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கயை, விடுதி ஊழியர் ஒருவரை “மசாஜ்” செய்வதற்கு விடுதி முகாமையாளர் அனுப்பியிருந்தார். உல்லாச விடுதி ஊழியர் குறித்த பெண்ணை ‘மசாஜ்’ செய்யும் தோரணையில், பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண் தனது கணவனிடம் விடயத்தைக் கூறி, வெல்லவாயா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இம்முறைப்பாட்டையடுத்து பொலிஸார் உல்லாச விடுதி ஊழியரைக் கைது செய்துள்ளனர்.