இரு நாட்களாக லிப்டில் சிக்கி தவித்த பெண்.!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வசித்து வருபவர் வாரன் ஸ்டீபன்ஸ். பெரும் தொழிலதிபரான இவருக்கு நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாபெரும் சொகுசு பங்களா உள்ளது.

இந்த வீட்டில் மரைட்ஸ் போர்ட்டாலிசா என்ற 53 வயது பெண் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த வெள்ளிகிழமை இரவு வீட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு, அவரது வீட்டிற்கு திரும்ப வீட்டின் 5-வது தளத்தில் இருந்து லிப்ட் மூலமாக கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லிப்ட் பாதியில் நின்றுள்ளது.

அதனால் மரைட்ஸ் போர்ட்டாலிசா லிப்டுக்குள் சிக்கிகொண்டார்.அதனை அறியாத வீட்டின் உரிமையாளர்கள் வார விடுமுறையை கொண்டாட சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். திங்கட்கிழமை காலையே வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மரைட்ஸ் போர்ட்டாலிசா லிப்டுக்குள் சிக்கி இருப்பதை அறிந்த அவர்கள் உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் லிப்ட்டில் சிக்கியிருந்த மரைட்ஸ் போர்ட்டாலிசாவை பத்திரமாக மீட்டனர்.

அதனை தொடர்ந்து 2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி லிப்டுக்குள் அடைபட்டு இருந்ததால், மிகுந்த சோர்வடைந்த மரைட்ஸ் போர்ட்டாலிசா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.