எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்.! தமிழ்நாடு என்ற பெயரிலும் அதிரடி மாற்றம்.!

தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களில் உள்ள வட மொழி எழுத்துக்களுக்கு பதிலாக தமிழில் ஆராய்ந்து, பெயர் மாற்றம் நடந்து வருகிறது. அதேபோல் ஆங்கிலத்திலும் சரியான உச்சரிப்புடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ‘தமிழ்நாடு’ என்பதை தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் ”thamilzhnadu” என்று என மாற்றும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில் எழுதும் போது வேறு மாதிரியான உச்சரிப்புடன் வரும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக, தஞ்சாவூர் – tanjore, தூத்துக்குடி – tuticorin,
வேலூர் – vellore இதுபோன்றே தமிழகத்தின் பல ஊர் பெயர்கள் அமைந்துள்ளன. இதனை மற்ற வேண்டும் என தமிழறிஞர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்து, மாவட்ட நிர்வாகம், வருவாய், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ், ஆங்கில அறிஞர்கள் அடங்கிய குழு,மாற்று ஓசையுடன் உள்ள ஊர் பெயர்களை ஆராய்ந்தது. பின், அதற்கு சமமான, ஆங்கில எழுத்து மற்றும் உச்சரிப்புடன் கூடிய பெயர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது வரை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மாற்றப்பட உள்ள ஊர்ப் பெயர்களின் பட்டியலை தமிழ் வளர்ச்சித் துறைக்கு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பியுள்ளனர். இது குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு துறைகளையே சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் ‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்திலும் ‘THAMIZH NADU’ என்று பெயர் மாற்றும் வகையில், இந்த மாத இறுதிக்குள் அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.