தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்த நபர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தையை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் கர்ணன். நடிகர் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகரான இவர் லட்சிய திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தார்.
கர்ணன் டீக்கடை நடத்தி வந்த நிலையில் கடையின் கீழ் பெரிய கருப்பன் என்ற முதியவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
பெரியகருப்பணின் திருமணமான மகள் சந்தியா அண்மையில் கணவரை பிரிந்து வீட்டிற்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று மதியம் கர்ணன் டீக்கடையை அடைத்து விட்டு பெரியகருப்பனின் மகள் சந்தியாவுடன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற நிலையில் கடையில் ரத்த வெள்ளத்தில் பெரிய கருப்பன் இறந்து கிடந்தார்.
பொலிசாரின் விசாரணையில் சம்பவத்தன்று காலையில் பெரியகருப்பனுக்கும் கர்ணனுக்கும் தகராறு ஏற்பட்ட தகவல் தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது பெரியகருப்பனை கொன்றதை ஒப்பு கொண்டார்.
அதாவது, கணவனை பிரிந்து வந்த பெரிய கருப்பனின் மகள் சந்தியாவுக்கு விவாகரத்து வழக்கில் உதவுவதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட கர்ணன், சந்தியாவை ஒரு தலையாக காதலித்தார்.
சந்தியாவிடம் தனது காதலை வெளிப்படுத்திய போது, அவர் காதலை ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து தனது தந்தையிடமும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான கர்ணன் தனது மகளின் வாழ்க்கையில் நுழைவதை விரும்பாத பெரிய கருப்பன், சந்தியாவுடன் பேசக்கூடாது என்று கர்ணனை கண்டித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கடையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து பெரியகருப்பனை தலையில் அடித்து கர்ணன் கொன்றுள்ளார்.
பெரிய கருப்பன் இறந்து விட்டால் சந்தியாவுக்கு ஆதரவு யாரும் கிடையாது என்பதால் எளிதாக சந்தியாவை தனது பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற திட்டத்தை கர்ணன் போட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் கர்ணணை கைது செய்துள்ளனர்.