அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிய நீதிபதி.. விழி பிதுங்கி போன தமிழக அரசு..!

புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் உள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட் டது.

புதுக்கோட்டை கோவில் கோட்டையைச் சேர்ந்த ஆதிமூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வெள்ளாற்றின் நீர் மூலம் ஆற்றை சுற்றியுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இந்த ஆற்று பகுதியில் சிலர்சட்டவிரோதமாக லாரிகளில்மணல் எடுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில்நிலத்தடிநீர் பாதிக்கபட்டு வருகிறது. மேலும் விவசாயத் திற்கு தேவையான தண்ணீர்கிடைப்பதில்லை.

இதனால்விவசாயிகள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகியுள்ளனர்.இங்கு சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல்எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மணல் அள்ளுவதைத் தடுக்கக் கோரி பலமுறை புகார் அளித் தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் லாரிகள் மூலம் மணல் எடுத்து வருவதால் விவசாய நிலங்களும் பாதிக்கபட்டு வருகிறது.எனவே வெள்ளாறு ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத்தடுத்து மணல் அள்ளுபவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண் டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போதுநீதிபதிகள், சட்டவிரோத ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது?

எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் வெள்ளாறு ஆற்றில் மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.