சோமாலியா நாட்டில் ஆளும் அரசை ஆட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு சில வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்த அமைப்பானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து தலைநகர் மொகடிஷூவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான மக்கா அல் முக்காரமா சாலையில் நேற்று வந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. கார் முழுவது வெடிகுண்டுகள் நிரப்பி பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர், அவர்களை அருகில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகினர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதவிர மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.