தோழி வைத்திருந்த பாட்டில் நீரை அருந்திய பின் வந்த வாந்தி.! பதறி ஓடிய ஆசிரியர்கள்!

டெல்லியில் இருக்கும் ஹரிஷ் விகார் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சஞ்சனா என்ற 11 வயதுடைய மாணவி 5 ம் வகுப்பு பயின்று வருகிறார்.

நேற்று மதியத்தின் போது இவருக்கு அதிகளவு தண்ணீர் தாகம் ஏற்பட்டதன் காரணமாக தனது தோழி வைத்திருந்த தண்ணீரை அருந்தியுள்ளார். பாட்டிலில் இருந்த தண்ணீரை அருந்திய சிறிது நேரத்திலேயே பாட்டிலையே தூக்கி எரிந்து விட்டு வாந்தி எடுத்தார்.

இதனை கண்டு அதிர்ச்சிடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். மேலும்., இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும்., அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளியில் மாணவி குடித்த நீருக்கு அடுத்தபடியாக அவர் வாந்தி எடுத்ததை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக தடவியல் நிபுணரை அழைத்து கொண்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் பாட்டிலில் இருந்த நீர் வெளியே ஊற்றும் சமயத்தில் நிறம் மாறியதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவு வெளிவரும் பட்சத்திலேயே மாணவியின் இறப்பு குறித்த தகவலானது தெரியவரும் என்று தெரிவித்தனர்.