வெளிநாட்டிலிருந்து கணவன் கொண்டுவந்த பேரிடி! மனைவி எடுத்த அதிரடிமுடிவு.!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி தாயம்மாள்.இவர்களுக்கு காவியாஞ்சலி, கவிபாரதி , ஜெயபாரதி என 3 மகள்கள் உள்ளனர். மேலும் சண்முகவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பிய சண்முகவேல் பாகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்து தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாயம்மாள் இதுகுறித்து கணவரிடம் சண்டைபோட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் தாயம்மாளை கடுமையாக தாக்கியுள்ளார்.

இது பெரும் பிரச்சினையை கிளப்பி வந்தநிலையில் சண்முகவேல் அவரது தாய், தந்தை மற்றும் அந்த வெளிநாட்டு பெண் ஆகியோர் ஒன்று சேர்ந்து தாயம்மாளை கொலை செய்ய முயற்சி செய்து தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த தாயம்மாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த தாயம்மாள் நேற்று தனது 3 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார்கள் அவர்களை தடுத்து கைப்பற்றினர். பின்னர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.