திருடிய பணத்தை திருப்பி கொடுத்த திருடன்!

சீனாவில் பணம் திருடிய நபர், மனம் மாறி திரும்ப கொடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஹேயூஹான் நகரில் உள்ள ஐசிபிசி வங்கி ஏடிஎம்மில் கடந்த மாதம் 16ஆம் தேதி லீ என்ற பெண்  பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு நுழையும் நபர் ஒரு மர்ம நபர் கத்தியைக் காட்டி லீயை மிரட்டு அவர் எடுத்த பணத்தை பிடிங்கிக்கொள்கிறார். மீண்டும் அந்த பெண்ணை மிரட்டும் அந்த மர்மநபர், வங்கிக்கணக்கில் உள்ள மீதிப்பணத்தையும் எடுத்துத்தரக்கோரி கேட்கிறார்.

மேலும் வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதையும் காட்டுமாறு இந்த பெண்ணிடம் கூறுகிறார். இதனால் பதற்றமான லீ அவசரம் அவசரமாக தனது வங்கிக்கணக்கு இருப்புதொகையை காட்டியபோது, அப்போது வங்கிக் கணக்கில் பணமே இல்லை என ஏடிஎம் இயந்திரம் காட்டுகிறது. இதனையறிந்த அறியும் அந்த மர்ம நபர், உடனே மனம் மாறி தான் பறித்த பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘இவர் ஒரு நல்ல திருடன்’ என்றும், ‘இரக்க குணம் படைத்த திருடன்’ என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த சிசிடிவி பதிவை வைத்து, சீன போலீசார் அந்த மர்ம நபரை கைது செய்துள்ளனர்.