‘பெண்களுடன் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இல்லை’- எஸ்.பி கொடுத்த திடுக்கிடும் விளக்கம்..?

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும்குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சிகொடூரத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி ”எங்களுக்கு நீதி வேண்டும்” என்று உடுமலைப்பேட்டையில் ஏராளமான கல்லூரி மாணவிகள் களத்தில் இறங்கினர்.

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக எஸ்பி பேட்டி கொடுக்கும் போது பெண்களுடன் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இல்லை அதனால் ரேப் வழக்கு பதியவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் பெண்களுடன் நேரடியாக உறவில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் எஸ்பிக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

பொதுமக்களின் கைக்கு கிடைக்கும் அளவில் உள்ள இந்த வீடியோ புலன் விசாரனை நடத்தும் உயர் அதிகாரிக்கு கிடைக்கவில்லையா தெரியவில்லையா ? என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விசாரணை முடியும் முன்னரே எஸ்பி எப்படி ஒரு முடிவிற்கு வந்தார் அதற்கு காரணம் என்ன என சமூக ஆர்வலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்