சந்தேக நோயால் வீசப்பட்ட அம்மிக்கல்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சூரமங்கலம் காலனி பகுதியை சார்ந்தவர் ராஜ்கிரண் (வயது 30). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கஸ்தூரி (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சுமார் 6 வருடங்கள் ஆகின்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., அங்குள்ள திருவாண்டார் கோவிலுக்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கஸ்தூரி பணியாற்றி வந்த நிலையில்., கஸ்தூரியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அடிக்கடி சந்தேகம் அடைந்து வந்த ராஜ்கிரண் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் நேற்று இவர்களுக்குள் தொடங்கிய தகராறு வாக்குவாதமாக முற்றவே., ஆத்திரமடைந்த ராஜ்கிரண் அம்மியை எடுத்து கஸ்தூரியை நோக்கி எறிந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த நிலையில்., இரத்தம் பீரிட்டு உயிருக்கு போராடி துடித்தார்.

இவரின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.