2 முறை பிணவறையில் திடீரென உயிர் பெற்று எழுந்த அதிசயம்!

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் உயிர் பெற்று எழுந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

பிரித்தானியாவில் மருத்துவர்களால் ‘மிராக்கல் மேன்’ என அழைக்கப்படும் 48 வயதான ஜோவோ அரூஜோ, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பத்திரிக்கை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ஏப்ரல் 18, 2009ம் ஆண்டு திடீரென ஜோவோவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பார்ப்பதற்கே பயமுறுத்தும் அளவிற்கு அவருடைய கண்கள் அப்படியே உருண்டுள்ளன. நாக்கு எக்குத்தப்பாக புரண்டுள்ளது.

உடனடியாக கிளவுசெஸ்டர்ஷயர் ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின் மாலை 4 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

அந்த சமயம் ஒரு செவிலியர் மட்டும் ஜோவோவின் உடலை பிணவறைக்கு எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது அவருடைய உடலில் லேசான அசைவு தென்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த செவிலியர் மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

நடந்தது என்னவென தெரியாமல் திகைத்த மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர். இறந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த 21 நிமிடங்களில் தான் அவருக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது. 3 நாட்கள் கோமாவில் இருந்த ஜோவோ, விழித்ததும் விசித்திரமான கேள்விகளை மருத்துவர்களிடம் எழுப்பியுள்ளார். என்னடைய பெயர் என்ன? என்னுடைய குடும்பத்தினர் யார்? எதற்காக இங்கு வந்தேன்? என அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தொண்டையில் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார்.

இதேபோல 2005ம் ஆண்டு ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியுள்ளார். அதில் அவருக்கு 90 சதவிகித ரத்தம் வெளியேறிவிட்டது. அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அதன் பிறகும் உயிருடன் இருந்துள்ளார்.

உயிர் பிழைத்தாலும், கை, கால்களை அசைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளார். ஆனால் சில நாட்களிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இவருடைய உடலை கண்டு மருத்துவர்கள் அனைவருமே பெரும் ஆச்சர்யத்திலே உறைந்து இருக்கின்றனர்.

மற்றொரு முறை 2015ல் தபால்காரராக பணிபுரிந்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் அவரை பார்த்து பதறியுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பெற்று எழுந்து வேலைக்கு சென்றிருக்கிறார்.