கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்புகளில் காயமடைந்த 251 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.