இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இரவு முதல் மீள் அறிவிக்கும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.