பழங்கால தமிழர்களின் விஞ்ஞான அறிவை பல்வேறு சான்றுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகளும், விளக்கங்களும் இருக்கும்.
பழங்கால தமிழர்கள் அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க? இந்த கேள்விக்கு விடை தேடினால் தமிழர்களின் விஞ்ஞான அறிவு உலகுக்கு புலப்படும்.
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது .
ஆனால் இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் பழங்கால தமிழர்கள் எப்படி கிணறு வெட்டினார்கள்.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
- நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும்.
- அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம்.
- அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்