இலங்கை கொடூர தாக்குதலில் குறிவைக்கப்படுவது தமிழர்களே!

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தங்கள் குடும்பத்தை இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நெடுஞ்சாலைகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிங்களப் பகுதிகளில் சோதனைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பகுதிகளிலேயே சோதனைக் கெடுபிடிகள் அதிகமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து புறப்படும் பஸ்களைப் பொறுத்தவரையில் பொலநறுவையிலும் சோதனை கெடுபிடியில்லை. அனுரதபுரத்திலும் இல்லை என்றும். வவுனியாவைத் தாண்டிய பின்னரே சோதனைகள் ஆரம்பமாகின்றதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.