பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியாம பகுதியில் ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட சில பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் குறித்த பள்ளிவாசல்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து மேற்படி பகுதியில் இன்று காலை 4.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.