நிறுத்தப்பட்ட நேற்றைய போட்டி.. கடுப்பில் தோனி செய்த காரியம்.!

இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆட்டம் டாஸ் கூட போட முடியாமல் மழை ஆரம்பம்பம் ஆனது.

இதுவரை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்திய அணி 2 போட்டிக்கு இரண்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இதைப்போல நியூசிலாந்து அணி 3 போட்டிகள் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று உள்ளது. தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால். இன்றைய ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் நல்ல மழை பெய்தது. மழை சற்று குறைந்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்ததால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மழையால் போட்டி நடைபெறவில்லை என்ற சோகத்தில் இந்திய வீரர்கள் அமைந்திருக்க, தோனி கண்ணை மூடிக்கொண்டு மல்லாக்க படுத்து தூங்கி கொண்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் போங்கடா நீங்களும் உங்க உலக கோப்பையும் சொல்லாமல் சொல்வது போன்று இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.