விமான விபத்தில் பலியான 13 பேரில் ஒரு தமிழரா?

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

அந்த விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும், மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜூன் 3ம் தேதி 13பேருடன் காணாமல்போன இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் கண்டிப்பிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது,

இந்நிலையில், அந்த விமானம் அருணாச்சலப்பிரதேசத்தின் சியாங் மாவட்டத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதில், ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்று தகவல் வெளியாகியுள்ளது.