திடீரென உருவான கலவரம்! முடங்கியது தலைநகரம்!

கர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. சற்றுமுன் தற்போது நடைபெற்று வரும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சராக இருந்த இருவரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு பாஜகவைப் ஆதரவளிக்க தயார் ஆனார்கள்.

இதனை எடுத்து அவர்கள் இருவர் வீட்டின் முன்புறமும் கடுமையான கலவரம் உருவானது. பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். தற்போது சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி ஏறக்குறைய தன்னுடைய இறுதி உரையை வாசித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு, உருக்கமான ஒரு உரையை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்.

ஆதலால் அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கலவரம் எதுவும் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் அடுத்த 48 மணி நேரம் 144 தடைவிதித்து, அனைத்து மது கடைகளும் மூடப்படும், மது பார்களையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.