ஆண்டர்சனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் தொடர் 1 க்கு 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பிடித்திருந்தார். ஆனால் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இதனால் 2-வது மற்றும் 3-வது போட்டியில் களமிறங்கவில்லை.

இந்நிலையில் அக்டோபர் மாதம் 4-ந்தேதி தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆண்டர்சன் தயாராகி வருகிறார். 4-வது போட்டியில் விளையாட வேண்டுமென்றால் அவர் உடற்தகுதியை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.

இதனையடுத்து அவர் வழக்கமாக விளையாடும் லங்காஷைர் கிரிக்கெட் கவுன்ட்டி அணியின் 2-ம்தர அணிக்காக களம் இறங்கியுள்ளார், முதல் ஸ்பெல்லில் ஆறு ஓவர்கள் வீசிய அவர், நான்காவது போட்டியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.