இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கை!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்ததுடன், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இதன் பின்னர் தவறான தகவல்களை, வதந்திகளை பரப்பிவிட கூடாது என காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை, அனைத்து செல்போன் நிறுவனங்களின் சேவை என அனைத்துமே முடக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் மந்திரி ஃபாவத் ஹூசைன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த செய்தியில், பாகிஸ்தானின் வான் எல்லையைத் தொடர்ந்து, இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என தெரிவித்துளளார்.

மேலும் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.