மோடியின் திட்டத்துக்கு தடையாக இருப்பது …., அமித்ஷா பேச்சு!!

குஜராத் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடந்த மரம் நடும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் மோடி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை உறுதியாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் இந்த இந்த திட்டத்துக்கு மிகப்பெரிய தடையாக பிளாஸ்டிக் இருக்கிறது என்றும். இதனால் தான் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார் என தெரிவித்தார்.

பெண்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும்போது பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அதற்கு பதிலாக துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும் எனவும், துணி பைகள் 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் என்றும் அவற்றை செல்வது பழைய காலத்து பாணி என கருதினாலும், இதுதான் பூமியை பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து காப்பாற்றும் என அமித்ஷா குறிப்பிட்டார்.