தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதை செய்வதில்லை.- சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது. ‘‘மற்ற விளையாட்டுத்துறையைச் சேர்ந்த வீரர்கள், அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடத் தொடங்கும்போது தங்கள் பயிற்சியாளர்களை மறந்து விடுகிறார்கள். பயிற்சியார்களுடன் அவர்கள் அதிக அளவில் பேசுவதில்லை, சந்திப்பதில்லை. ஆனால், மற்ற விளையாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு தொடக்கத்திலிருந்து இறுதி வரை பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பயிற்சியாளர்கள் அவருடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என தெரிவித்தார்.