ஜாலியாக இருந்த கவினுக்கு காத்திருந்த அதிர்ச்சி..???

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 ,67 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

மூன்று சீசனிலும் காதல், சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் இவை அனைத்தும் அரங்கேறி வருகிறது. மக்களை இந்நிகழ்ச்சி அதிகமாக கவர்ந்து வருகின்றது. மேலும் கவின், லாஸ்லியா காதல் தொடர்ந்து வருகிறது.

மேலும் அவர் லாஸ்லியாவுடன் நெருங்கிப்பழகி வந்த நிலையில், கமலே இதனை சுட்டிக்காட்டி அவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு விவகாரம் பெரிதானது. இவ்வாறு கவின் காதலில் ஜாலியாக இருக்கும் நிலையில், சீட்டு கம்பெனி நடத்தி 34 பேரிடம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பண மோசடி செய்ததாக கவின் தாயார் ராஜலட்சுமி, அவரது மருமகள் ராணி, மேலும் தமயந்தி, அருணகிரி, சொர்ணராஜன் ஆகியோர் மீது 2007 -ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கவின் தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.