தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த சஜித்..!

தனக்கு கீழ் உள்ள கலாச்சார அமைச்சின் நிதியானது முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் கருத்துக்களில் உண்மையில்லையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற விழாவொன்றில் வைத்து கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியவர்களே, இன்று என் மீது இவ்வாறு குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்தவுமே இவ்வாறு சஜித் பிரேமதாஸவின் கலாச்சார அமைச்சின் நிதி முறைகேடு தொடர்பில் சமீபத்தில் கருத்து வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.