பிரபல பேய் பட இயக்குனர் காலமானார்!

பிரபல இந்தி இயக்குனர் ஷியாம் ராம்சேக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு தற்போது வயது 67.

இவரது முதல் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு துளசி என்ற திகில் படத்தை இயக்கினார். அந்த படம் வசூல் வசூலில் சாதனை படைத்தது. அதன்பிறகு பேய் படங்களை இயக்கினார். புரானி கவேலி, ஹஸ்கிஹானா, தர்வாஜா உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

இதுவரை 20 திகில் பேய் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து திகில் படங்களும் வசூலை அள்ளி தந்தது. சத்ருகன் சின்ஹா, பிருதிராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஷியாம் ராம்சே இயக்கத்தில் நடித்துள்ளனர். ஷியாம் ராம்சே உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.