இறால் பிடிக்காதவர் இருக்க முடியாது. அத்தகைய இறாலில், சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையானவை
- இறால் – 300 கிராம்
- முட்டை – 3
- வடித்த சாதம் – ஒரு கப்
- பச்சை மிளகாய் – 3
- பெரிய வெங்காயம் – 2
- கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
முதலில், இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து. உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.
இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.
கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறலாம்.