கைக்குழந்தையுடன் மலை ஏறி சாகசம் செய்துள்ள நடிகை சமீரா ரெட்டி- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

வாரணம் ஆயிரம் மூலம் பல உள்ளங்கள் கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. 2013ல் திருமணம் ஆகி முதலில் ஒரு ஆண் குழந்தை இருந்த வேளையில் இப்போது இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சமீரா ரெட்டி இரண்டாவது குழந்தையின் கர்ப காலத்துல் சில வித்தியாசமான புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு நிறைய ரசிகர்களை திரட்டியவர். இப்போது தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் மலை ஏறுவது போல் வீடியோ வெளியிட்டு இருப்பது பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.

சமீரா தன் இரண்டு வயது குழந்தையுடன் கர்நாடகாவில் உள்ள முல்லயநாகிரி சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 6300 அடி உயரத்தில் தன் குழந்தையை கையில் சுமந்த படி மலை ஏறியிருக்கிறார்.

மலை ஏறும்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் மேலும் மலை ஏறும் போது இடை இடையே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாகவும் அவர் கூறி இருப்பது இணையத்தளத்தில் மிகவும் வைரல் ஆகியுள்ளது.