பிரபல நிறுவனத்தில் ஒரே நேரத்தில்10,000 ஊழியர்கள் பணி நீக்கம்.!

பிரபலமான கார்களான மெர்சிடஸ்-பென்ஸ் கார்களை ஜெர்மனியின் டைம்லர் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது, இந்த நிறுவனம் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் டைம்லர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், இனி  எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக  டைம்லர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட் குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிலிடத்தக்கது.