கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த 35 வயது விதவை பெண்! வெளிவந்த உண்மை!!

இந்தியாவில் விதவைப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாக்பூரை சேர்ந்த 35 வயது பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து அவர் கர்ப்பமாகி இரண்டு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார்.

விதவை பெண் எப்படி கர்ப்பமாக முடியும் என சந்தேகப்பட்ட மருத்துவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் பொலிசார் வந்து விதவைப்பெண்ணிடமும், அவர் மைத்துனரிடமும் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொலிசார் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் விதவை பெண் வீட்டில் தனியாக இருந்த போது அவினாஷ் (22) என்ற இளைஞர் வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் அங்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர், அவனை பிடித்து அடித்தார், ஆனால் பொலிசில் இது குறித்து புகார் அளிக்கவில்லை.

எங்கே பொலிசில் இதை சொன்னால் குடும்ப கெளரவம் கெட்டு விடுமோ என அஞ்சி இவ்வாறு அவர்கள் செய்துள்ளனர்.

பின்னர் கர்ப்பமான விதவை பெண்ணை பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு குழந்தை பிறந்த பின்னர் குழந்தையின் தந்தை குறித்து அவர்கள் மழுப்பியதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தற்போது விதவையை பலாத்காரம் செய்த அவினாஷை கைது செய்துள்ளோம், அவனை காவலில் வைத்து 28ஆம் திகதி வரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பொலிசார் கூறியுள்ளனர்.