உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ரிசர்வ் பொலிஸ் அதிகாரியான கான்ஸ்டபிள் ஒருவர், மேல் அதிகரிகளால் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “நான் எனது சொந்த காவல் துறையில் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு ஆறுதல்படுத்த முடியும்? நானே பாதிக்கப்பட்டிருக்கும் போது, மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வது பற்றி எப்படி யோசிக்க முடியும்? பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக காவல் துறையில் பனி செய்யும் எனக்கே நீதி கிடைக்கவில்லை என பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
” மேலதிகாரிகள் மூலமாக எனக்கே பாலியல் தொல்லைகள் வழங்கப்பட்டு வரும் வேளையில் மாநிலத்தில் உள்ள மற்ற பெண்களை நான் எப்படி பாதுகாக்க முடியும்?” எனக்கூறி அழுகிறார் உபி தலைநகர் லக்னோவில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்த போலீஸ் Constable. #yogikajungleraj pic.twitter.com/zgENKVCY9b
— NewsCap.in (@Newscap_in) January 9, 2020