பல்கலைக்கழக பேராசிரியர் பாலியல் தொல்லை… மாணவி எடுத்த விபரீத முடிவு…..

தமிழகத்தின், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிவேதிதா என்னும் இளம்பெண் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி சேர்ந்தது முதல் கல்லூரி விடுதியில் தங்கி தான் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று நிவேதிதா திடீரென அவர் தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். பின்பு, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த கல்லூரியில் பணி புரிந்து வரும் பேராசிரியர் ஒருவர் நிவேதிதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

மேலும், இது குறித்து விடுதி மாணவர்கள் அந்த கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்து 5 மணி நேரத்திற்கு மேலும் துணை வேந்தர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாணவியின் தற்கொலையைக் கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்வதாகவும், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்த உண்மையை வெளி வர வேண்டும் என்று சக மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,