யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் நிலாவரை ஈவினை பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைத்த தகவலையடுத்து எரிக்கப்பட்ட நிலையில் குறித்த மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என அச்சுவேலி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மோட்டார்சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி மற்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.