யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் மாணவர்கள் மத்தியில் திடீர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக உள்ளது சிமாட் தொலைபேசிகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?? இதோ அதிர்ச்சித் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது….
பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகளை, மாணவர்களை வைத்திருக்கும் பெற்றோரே!! தயவு செய்து இதைப் படியுங்கள்!! மற்றவர்களுக்கும் பகிருங்கள்…..
5 வயது முதல் 10 வயதில் எழுதும் புலமைப்பரிசில் பரீட்சை, 16 வயதில் எழுதும் ஓ.எல் பரீட்சை வரை தனது பிள்ளையின் எதிர்காலத்திற்காக அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் ஏச்சு வாங்கி, திட்டு வாங்கி களவாக மோட்டார் சைக்கிளில் பிள்ளையை பாடசாலை, ரியுசனில் ஏற்றி இறக்கும் பெற்றோர் யாழ்ப்பாணத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள். பணக்காரர்களுடன் போட்டி போட்டு தனது பிள்ளையும் நல்ல பாடசாலையில் கற்க வேண்டும் என்ற அவாவில் மாடாய் உடல் தேய்ந்து உழைத்து படிப்பிக்கும் ஏழைப் பெற்றோரும் யாழில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு தனது பிள்ளைகளை கனவுகளுடன் கற்பிக்கும் பெற்றோரில் பலர் தமது பிள்ளைகளால் ஏமாந்து போவது எப்போது???
பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை கட்டிளம் வயதில் கருசணையுடன் கவனிக்கத் தவறுகின்றனர். பாடசாலை விட்டவுடன், சனி, ஞாயிறு ரியுசன் செல்வது என திரியும் பிள்ளைகளை சிறுவயதில் கவனிப்பது போல் கவனிக்கத் தவறுகின்றார்கள். பிள்ளைகளுக்கு சிமாட் போனை வாங்கிக் கொடுத்து அவர்களை மெல்லக் மெல்லக் கொலை செய்யும் செயற்பாட்டுக்கு உள்ளாக்குகின்றார்கள். கட்டிளம்பருவத்தில் உள்ள பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் பாடசாலை, ரியுசன் நடவடிக்கைகளுடன் கைத்தொலைபேசிகளையும் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக தற்போது உருவாகியுள்ளது.
வாசிப்பதற்கும் பகிர்வதற்கும் கூசும் சில உண்மைச் சம்பவங்கள் இங்கு தரப்படுகின்றன.
யாழ் நகரப்பகுதிக்கு ரியுசனுக்காக வந்த 18 வயது மாணவி யாழ் நகரப்பகுதியில் நடைபாதைக் கடையில் ஆடை விற்கும் ஒருவனிடம் ‘மருத்துவபீட மாணவன்” என நம்பி ஏமாந்து அங்குள்ள விடுதியில் காதல் என்ற போர்வையில் பலதடவை அவனால் உடலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவளுடன் உறவு கொள்ளும் போது எடுத்த வீடியோக்களையும் தனது சகபாடியிடம் காட்டி மகிழ்ந்துள்ளான். அதே சகபாடிகளுக்கு அவளை விருந்தாக்க முற்பட்ட போது குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள். இவ்வளவுக்கும் காரணம் அந்த மாணவி வைத்திருந்த சிமாட் போனில் ஏற்பட்ட தொடர்ச்சியான தொடர்பே.
யாழ் பல்கலைக்கழகத்தின் குறித்த பீடத்தில் 3ம் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவன் ராக்கிங் என்ற போர்வையில், ஏ.எல் பரீட்சை பெறுபேறு வந்து சிலநாட்களேயான நிலையில் அதே பீடத்தில் கற்க ஆயத்தமான மாணவி ஒருவரை தொடர்பு கொண்டு, மிகக் கேவலமான முறையில் அவளைக் கையாண்டுள்ளான். அதில் உச்ச கட்டமாக தான் சுயஇன்பம் செய்வதை வட்சப்பில் நேரடியாக பார்க்க வற்புறுத்தி பலதடவை அவளை அவ்வாறு பார்க்கச் செய்துள்ளதுடன் அவளது அந்தரங்கங்களையும் அச்சுறுத்தி காண்பிக்க செய்துள்ளான். அவனது எல்லை மீறவே தாங்கமுடியாத மாணவி தனது சகோதரிக்கு இதைத் தெரிவித்த பின்னரே சகோதரி மேற்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கையால் அவனது கொட்டத்தை அடக்க முடிந்தது. அவனது அனைத்து சற்றிங் மற்றும் விபரங்கள் எம்மிடம் உள்ளன. குறித்த மாணவனின் முகப்புத்தகத்தை ஆராய்ந்த போது அம் மாணவனுக்கு வேம்படி மகளீர் கல்லுாரியில் கற்கும் சகோதரி உட்பட இரு சகோதரிகள் உள்ளனர். தந்தை தொடர்பாக ஆராய்ந்த போது அவர் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மேலான ஒரு பதவில் உள்ளார். தாயார் அரச அலுவலர். குறித்த மாணவனின் புகைப்படத்தையும் அவன் செய்த கேவலமான செயற்பாடுகளையும் ஊடகத்தில் வெளிக்காட்டியிருந்தால் மாணவனின் குடும்பத்தில் யாராவது ஒருவர் தற்கொலை செய்திருப்பர். குறித்த பல்கலைக்கழக மாணவனுக்கும் அவனது பெற்றோருக்கும் இது தொடர்பாக உரியமுறையில் தொடர்பு எடுக்கப்பட்டு மாணவன் அடக்கப்பட்டுள்ளான்.
3 மாத காலத்துக்குள் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட நேற்றுவரை 7 இளம் யுவதிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இவர்கள் எதற்காக தற்கொலை செய்தார்கள் என இன்னும் பெற்றோர் அறிய முடியாத நிலையில் உள்ளார்கள். தற்கொலை செய்து உயிரிழந்த ஒரு மாணவியின் கைத்தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது இளைஞன் ஒருவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளும் வீடியோ அவளது வைபரில் உள்ளது. குறித்த இளைஞனை அவள் காதலித்துள்ளதும் அவளுடனும் அந்த இளைஞன் உறவு கொண்டுள்ள பல புகைப்படங்களும் அந்த கைத்தொலைபேசியில் உள்ளன. குறித்த அவர்களது சற்றிங்கை ஆராய்ந்த போது அந்த இளைஞன் ஏற்கனவே திருமணமானவன் என்பதை யுவதி அறிந்தே பழகியுள்ளதும் அத்துடன் மனைவியுடன் உறவு கொண்ட வீடியோக்களையே அவன் அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த யுவதி எதற்காக தற்கொலை செய்தாள் என அந்த சற்றிங்குகளை வைத்து அறிய முடியவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. பெற்றோரிடம் அந்த இளைஞன் யார் என கேட்ட போது அவர்களுக்கே அவன் யார் என தெரியவில்லை. அவனது தொலைபேசி இலக்கமும் அவனது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகின்றது. கைத்தொலைபேசிக்கு பாஸ்வேட் கொடுத்து வைத்திருந்த யுவதியின் பாஸ்வேட் அவளது இளைய சகோதரத்துக்கு தெரிந்திருந்ததால் இவற்றை அறிய முடிந்தது. இதே போல் ஓரிரு வருடத்துக்குள் மேலும் பல யுவதிகளின் தற்கொலைக்கு கைத்தொலைபேசியில் இருக்கும் ஆதாரங்களே காரணம் என அறிய முடிந்தாலும் அத் தொலைபேசிக்கு இறந்தவர்களால் கொடுக்கப்பட்டிருந்த பாஸ்வேட்டுக்களால் அவற்றை அறியமுடியாத நிலை உள்ளது என பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மாணவிகள், யுவதிகள் உடல் ரீதியான உறவு கொள்வதை ஆண்களுடன் இரகசியமாக மேற்கொள்ள முயன்றாலும், ஆண்கள் உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொள்வது போலான நிலையிலேயே காணப்படுகின்றார்கள்.
முக்கியமாக எந்த ஒரு யுவதியும் காதலனால் சீரழிக்கப்படுவது மிகக் குறைந்த அளவே என்பதுடன், குறிப்பாக அவர்களுடன் நெருக்கமாக பழகும் இளைஞர்கள் மற்றும் கல்விகற்கும் கூட்டாளிகள் மற்றும் குடும்பஸ்தர்களாலேயே அவர்கள் சீரழிக்கப்படுவதுடன், அவர்களுக்கிடையில் இடம்பெறும் அந்தரங்க செயற்பாடுகள் ஆண்களால் கைத்தொலைபேசிகளில் பதியப்பட்டு தமது ஆண்மையின் பெருமைகளை அவர்கள் மற்றைய ஆண்களுடன் பகிரும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு பகிரப்படும் வீடியோக்களால் அந்த வீடியோவில் உள்ள யுவதியை பல ஆண்கள் அச்சுறுத்தி தம்வசப்படுத்தும் நிலையிலேயே பல யுவதிகள், மாணவிகள் செய்வதறியாது தற்கொலை செய்வதாகவும் தற்கொலைக்கு முயல்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
தற்போது யாழ்பல்கலைக்கழகம் மற்றும் வேறு பல்கலைக்கழகங்களில் ராக்கிங் கைத்தொலைபேசிகளில் குறுாப் சற்றிங் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே மிகக் கொடூரமான முறையில் இடம்பெறுகின்றன. இவற்றின் ஆதாரங்கள் சில நாம் இங்கு பகிந்ர்ந்துள்ளோம். அந்த ராங்கிங்குகளில் வட்சப் மற்றும் வைபர் ஊடாக மாணவிகளின் அந்தரங்க உறுப்புக்களை பார்ப்பதற்கும் அவற்றை வீடியோவாக சேமித்து ரசிப்பதற்கும் ஒரு சில காமுக மாணவர்கள் மிக நுணுக்கமாக செயற்பட்டுள்ளார்கள், செயற்படுகின்றார்கள். ( பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பாலான சீனியர் மாணவர்கள் இவ்வாறான மோசமான நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்பது உண்மை). தமது பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் பெற்றோர் அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைத்து அவர்களில் அக்கறை கொள்ளாது விட்டால் நீங்களும் அவமானப்பட்டு உங்கள் பிள்ளையின் வாழ்கையும் கேள்விக்குள்ளாகி விடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் பெண் பிள்ளைகளின் பெற்றோரே உங்கள் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படிக்கும் வரை சிமாட் போன் வைத்திருப்பதை தடை செய்யுங்கள். அல்லாதுவிடின் அவர்களை தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாது விடின் உங்கள் பிள்ளையின் அந்தரங்க வீடியோக்கள் பலரின் கண்களுக்கு விருந்தாக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம். ராக்கிங் முடிந்தும் சில காலங்களுக்கு இரவில் அவர்களின் தொலைபேசியை பிள்ளைகளின் தந்தைகளே அல்லது சகோதரர்களே உங்களுடன் வைத்திருங்கள்.
6) பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து தொழில்நுட்பக்கல்லுாரிகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் குறித்த கல்லுாரிகளில் கற்க எடுக்கும் நேரத்தை பெற்றோர் அறிந்து வைத்திருந்து அவர்கள் பிந்தி வரும்போது அதற்கான காரணத்தை நிச்சயம் அறிய வேண்டும் என்பதுடன் அவர்களது கற்றல் செயற்பாடுகளிலும் கவனத்தை செலுத்துதல் அவசியம். அத்துடன் குறித்த கல்லுாரிகளில் கற்று 6 மாத பயிற்சிக்காக அரச அலுவலங்களில் சேரும் சில மாணவிகளை வேட்டையாடுவதற்கும் அந்த அலுவலகங்களிலேயே குறியாக சில அலுவலர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களில் பலர் அரசியல்செல்வாக்குள் உள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு அந்த அலுவலகங்களிலேயே நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக அவர்களுக்கு ஆசையூட்டி அந்த பெண்களை சீரழிக்கின்றார்கள். இவ்வாறு மாணவர்களாயின் அவர்களிடத்தில் காசு கறக்கும் வேலையை பார்க்கின்றார்கள்.
மாதக் குழந்தையாக இருக்கும் தனது மகளுக்கு நுளம்பு கடித்து வரும் தளம்புக்கு கருசணையுடன் பார்மசிகளில் மருந்து தேடித்திரியும் தந்தைகள் உள்ள எமது தமிழர் தாயகத்தில் வயதுக்கு வந்த தனது மகள் தற்கொலை செய்து துாக்கில் தொங்குவதையும் திருமணமாகாது கர்ப்பம் தரித்து நிற்பதையும் பலரால் பாலியல் வேட்டையாடப்பட்டு அவமானப்பட்டு நிற்பதையும் எந்த தந்தையாவது தாங்கிக் கொள்வீர்களா?? உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் நுளம்பு வலை போல செயற்பட்டு அவர்களை காப்பாற்றுவது பொறுப்புள்ள உங்களது கடமையாகும்……..
குறிப்பு :- எமது இணையத்தளத்தினை நம்பி தகவல்கள் தந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் சில மாணவர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவர்களின் கேவலங்களை வெளியிட்டதுடன் அவர்களின் தொலைபேசி இலக்கங்களை நாங்கள் வெளியிட்ட போது குறித்த மாணவர்களின் இலக்கங்களை வட்சப்பில் தேடி அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளவாசிகள் எடுத்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால் எம்மிடம் குறித்த மாணவர்களின் சற்றிங் மற்றும் வீடியோக்கள், மற்றும் அந்தரங்க செயற்பாடுகள் ஆதாரங்களாக உள்ளன. இனிவரும் காலம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்படி நபர்களும் ஏனைய மாணவர்களும் செய்ய மாட்டார்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இனிமேல் இவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டால் அவர்களின் அனைத்து புகைப்படங்கள் மற்றும் அவர்களின் உறவுகளின் புகைப்படங்கள் உட்பட அனைத்து அந்தரங்க தகவல்களும் நாம் இங்கு வெளிப்படுத்தும் நிலை ஏற்படும். எம்மிடம் ஆதாரங்கள் இல்லை என நினைக்கும் அந்த அந்த தரப்பினருக்காக பதிவிடக்கூடிய சிலவற்றை இங்கு வெளியிடுகின்றோம்.
கீழே உள்ள குறுாப் சற்றிங்குகள் சாதாரணமாகக் காணப்படும் குறித்த சற்றிங் ஓடியோக்கள் அனைத்தும் எம்வசம் உள்ளன என்பதையும் அந்த ஓடியோக்களில் மாணவர்களை எப்படி அச்சுறுத்துகின்றனர் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்பதையும் குறித்த மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் உங்களில் ஒரு சிலர் தனித்தனியே சில மாணவிகளுடன் மேற்கொண்ட மிகக் கேவலமான சற்றிங்குகளும் எம்மிடம் உள்ளன. அதில் நீங்கள் வீடியோ சற்றிங் மேற்கொண்டதற்கான ஆதாரங்களும் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனிவரும் காலம் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் திருந்திவிடுவீர்கள் என நம்புகின்றோம். அவ்வாறு திருந்தாது நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்வீர்கள் என நீங்கள் எண்ணினால் உங்கள் பெற்றோருக்கு முதலில் அதை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் உங்களது புகைப்படங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பங்களின் தகவல்களும் எம்மால் துள்ளியமாக வெளியிடப்படும் என்பதை காவாலி மாணவர்களை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.