செல்போன் பேசிய சிறுமிக்கு ஏற்பட்ட அவலநிலை….

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் சிறுமி ஒருவர் சிறுவனுடன் போனில் பேசியதால் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதுடன், முடியை வெட்டி கொடுமைப் படுத்தியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்புர் என்னும் பகுதியில் சிறுமி ஒருவர் வேறு ஒரு சிறுவனுடன் செல்போனில் பேசியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் அச்சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிறுமியை கொடூரமாக தாக்கி, ஊரார் முன்னிலையில் சிறுமியின் தலை முடியை வெட்டி கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் மக்கள் முன்பு நடந்த இந்த கொடுமையை யாரும் தட்டி கேட்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டும், செல்போனில் படம் எடுத்துக்கொண்டும் இருந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, குடும்பத்தினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.