முகத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க இந்த 12 அசத்தலான டிப்ஸ்..!!

பொதுவாக சருமத்தில் நிறம் மாற்றம், பருக்கள், பருக்களால் வடுக்கள், கரும்புள்ளிகள், தேமல், கருவளையம், கண்களுக்கு கீழ் இரப்பை வீக்கம், முகத்தில் முடி இப்படி இன்னும் கூட சில பிரச்சனைகள் வருவதுண்டு. இதனால் நமது இயற்கை அழகே பாழாகிவிடுகின்றது.

இதனை போக்க நம்மில் பலர் செயற்கை பொருட்களையே தேர்ந்தெடுப்பதுண்டு. இது முக, சரும பிரச்சனைகளை மேலும் அதிகரிக்க செய்கின்றது.

இதனை தவிர்த்து விட்டு வீட்டில் இயற்கையாகவே கிடைக்கும் பழங்கள் முதல் காய்கறிகள், உலர் பருப்புகள், அழகு தரும் பொடிகள் குறிப்பாக மஞ்சள் தூள், பாசிபயறு, அரிசி மாவு, சந்தனம், முல்தானிமெட்டி, கற்றாழை, தயிர், பன்னீர், என அனைத்தையும் பயன்படுத்தலாம்.

அந்தவகையில் இவற்றை கொண்டு எப்படி சரும பிரச்சனைகளை சரி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • முகத்திற்கு நீராவி பிடிக்கலாம். நீராவி பிடிக்கும் போது அதில் புதினா இலை சேர்த்து பிடிக்கலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகிறது. முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்படுவதால் முகம் புத்துணர்ச்சியோடு இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
  • சந்தனம், மிளகு, ஜாதிக்காய் மூன்றையும் சேர்த்து அரைத்து முகப்பருக்களின் மீது தடவி வந்தால் முகப்பருக்கள் படிப்படியாக மறையும்.
  • பருக்கள் கட்டிகள் போன்று இருந்தால் அதனுடன் வேப்பிலையையும் சேர்த்து அரைத்து தடவலாம். இதனால் முகப்பருக்களுக்கு பின்பு அந்த இடத்தில் தழும்புகள் இருக்காது.
  • வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து கருவளையம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் கருவளையம் நீங்கும். கண்களின் மீது வட்டவடிவமாக நறுக்கி வைத்தால் கண்கள் பளிச்சென்று இருக்கும். இரவு தூங்கும் போதும் விளக்கெண்ணெய் வைத்து தடவி வந்தால் புருவத்தில் அடர்த்தி அதிகமாகும்.
  • காலையில் எழுந்ததும் ஐஸ்கட்டியை கொண்டு வீக்கத்தின் மீதும் கண்களை சுற்றியும் வைத்தால் வீக்கம் வற்றிவிடும். தொடர்ந்து 15 நாட்கள் செய்துவந்தாலே இந்த வீக்கம் குறையும்.
  • பாசிப்பயறு மாவுடன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரவில் தூங்கபோகும் முன்பு கற்றாழை சாறு தடவி வரவேண்டும் நாளடைவில் கருந்திட்டுகள் மறைய தொடங்கும்.
  • கோதுமை தவிடு, சர்க்கரை, ஓட்ஸ் பொடி இவற்றில் ஒன்றை எடுத்துகொண்டு பாசிப்பயறு மாவு, அரிசி மாவு இவற்றுடன் கலந்து மூக்கின் மீது வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். தினமும் தேய்க்க தேய்க்க இவை வெளியேறும். பிறகு வாரம் ஒரு முறை நீங்கள் இப்படி செய்யலாம். முகத்துக்கு நீராவி பிடித்த பிறகு சருமத்துவாரங்கள் திறக்கும் அப்போது இதை வேரோடு நீக்குவது சுலபமாக இருக்கும்.
  • கஸ்தூரி மஞ்சளுடன் அரிசி மாவு அல்லது பாசிப்பயறு மாவு அல்லது கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்; பிறகு ஸ்க்ரப் செய்ய சர்க்கரை அல்லது ஓட்ஸ் பொடி சேர்த்து உடனடியாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் முடி மேலும் வளராது உதிர்ந்துவிடும்.
  • முகத்துக்கு வெயிலிலிருந்து பாதுகாக்க சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும். அதே நேரம் மேக் அப் செய்தாலும் இரவு தூங்கும் முன்பு அதை ஆலிவ் ஆயில் அல்லது வைட்டமின் ஆயில் கொண்டு கலைக்க வேண்டும். பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவி வைட்டமின் இ ஆயில் கொண்டு மசாக் செய்துவந்தால் முகத்தின் நிறம் சீராகும்.
  • குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து கசகசா சேர்த்து அரைத்து முகத்துக்கு பேக் போடுங்கள். குளிப்பதற்கு முன்பு கற்றாழை சாறு கொண்டு மசாஜ் செய்துவரலாம். ஒரு நாள் மேஜிக் அல்ல என்பதால் விடாமல் இதை செய்துவந்தால் தான் முகத்தை மீட்டெடுக்க முடியும்.
  • பப்பாளி, வெள்ளரி, தக்காளி போன்ற பழங்களோடு வாழைப்பழத்தோலை கொண்டும் முகத்துக்கு மசாஜ் செய்தால் சுருக்கம் மறைந்து முகம் மினுமினுப்பையும் கூடுதலாக பெறலாம். மாதம் ஒரு முறை பாதாம் ஃபேஷியல் செய்வதும் சருமத்தை சுருக்கமில்லாமல் வைத்திருக்கும்.
  • உதட்டின் நிறம் சிவப்பை அளிக்க பீட்ரூட், கேரட், குங்குமப்பூ சாறு தடவலாம். மினுமினுப்புக்கு வைட்டமின் இ ஆயில், வெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவையும் தடவலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உதட்டின் மீது தடவிவந்தால் உதட்டின் அழகு தனியாக காண்பிக்கும்.