பயன்படுத்தப்பட்ட மாஸ்க் , வீட்டுக்கழிவுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டில் பரவிவரும் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து மக்களுக்களையும் மிகுந்த பாதுகாப்போடு வீட்டினுள்ளேயே இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது வீடுகளில் சேரும் கழிவுப்பொருட்களை அகற்றுவதில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என,மேல் மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் போன்ற பொருட்களை முடிந்தவரை எரித்துவிடுமாறும் அச் சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கழிவுப்பொருட்களை அகற்றுவதிலும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இதுதொடர்பிலும் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.