கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி?

தமது நாட்டில் ஊழித்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான தமது அனுபவ பகிர்வுகளை சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் கொரோனா தொடர்பான தமது அனுபவங்களையும், நுட்பங்களையும் வீடியோ கலந்துரையாடல் மூலம் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை உள்ளிட்ட 18 தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் பங்குபற்றிய அதேவேளை இலங்கை சார்பில் சிரேஷ்ட தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கலந்துகொண்டார்.